உங்கள் வங்கிக் கணக்கு எண், பான் கார்டு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றைத் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்துவதைப் போலவே, உங்கள் அடையாளத்தை நிரூபிக்கவும், பரிவர்த்தனை செய்யவும் உங்கள் ஆதாரை எந்தத் தயக்கமும் இல்லாமல் பயன்படுத்த வேண்டும். UIDAI அறிவுறுத்தியது என்னவென்றால், ஆதார் அட்டையை அடையாளத்தை நிரூபிக்கவும் பரிவர்த்தனை செய்யவும் சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும், ஆனால் ட்விட்டர், பேஸ்புக் போன்ற பொது தளங்களில் வைக்கக்கூடாது. மக்கள் தங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு விவரங்கள் அல்லது காசோலையை (வங்கி கணக்கு எண் கொண்டுள்ள) அவர்கள் பொருட்களை வாங்கும்போது, அல்லது பள்ளிக் கட்டணம், தண்ணீர், மின்சாரம், தொலைபேசி மற்றும் பிற பயன்பாட்டுக் கட்டணங்கள் போன்றவற்றைச் செலுத்தும்போது, பயன்படுத்துகிறார்கள் அதேபோல் எந்த அச்சமும் இல்லாமல் தேவைப்படும்போது, உங்கள் அடையாளத்தை நிறுவுவதற்கு உங்கள் ஆதாரை நீங்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆதாரைப் பயன்படுத்தும் போது, மற்ற அடையாள அட்டைகளில் நீங்கள் செய்யும் அதே அளவிலான கவனத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும் - அதிகமாகவோ, குறைவாகவோ இல்லை."